மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; அதிகாரிகள் சீரமைப்பு பணியில் தீவிரம்

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு அருகே ராட்சத மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகரில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது.



இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு, இரண்டாவது கொண்டை ஊசி வளைவு இடையே திடீரென சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.



இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டன.



இது குறித்த தகவல் கிடைத்ததும், மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் பவர் சா மூலம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர். வெட்டிய மரத்துண்டுகள் ஜேசிபி வாகனம் மூலம் சாலையோரத்துக்கு அகற்றப்பட்டன.



கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல், சக்தி வாய்ந்த விளக்குகளின் உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலையில் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...