மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; அதிகாரிகள் சீரமைப்பு பணியில் தீவிரம்

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு அருகே ராட்சத மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகரில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது.



இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு, இரண்டாவது கொண்டை ஊசி வளைவு இடையே திடீரென சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.



இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டன.



இது குறித்த தகவல் கிடைத்ததும், மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் பவர் சா மூலம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர். வெட்டிய மரத்துண்டுகள் ஜேசிபி வாகனம் மூலம் சாலையோரத்துக்கு அகற்றப்பட்டன.



கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல், சக்தி வாய்ந்த விளக்குகளின் உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலையில் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...