திருப்பூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூரில் கன மழையால் பழவஞ்சிபாளையம் காலனி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நிரந்தர தீர்வு கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வீரபாண்டி அருகே உள்ள பழவஞ்சிபாளையம் காலனி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், அனைத்து வீடுகளிலும் மழைநீர் நிரம்பியது. குறிப்பாக, குழந்தைகள் உள்ள குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின.

வீடுகளுக்கு அருகில் உள்ள குட்டை பகுதியில் புதிதாக வீரபாண்டி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக குட்டைப் பகுதியில் மண் கொட்டி மேடுபடுத்தியுள்ளனர். இதனால் குட்டையில் உள்ள தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மழைக்காலம் தொடங்கியுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.



இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம்-திருப்பூர் பிரதான சாலையில் உள்ள வீரபாண்டி சிக்னல் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உயர் அதிகாரிகள், மாநகராட்சி மேயர் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...