கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்கப்படும். 15 நாட்கள் மட்டும் இச்சேவை செயல்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக அபுதாபிக்கு மட்டும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவிற்கு வழக்கம் போல் விமானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை Jazeera என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள விமான சேவை நேரம் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.





இந்த பணிகள் நிறைவடைந்த பின் அதிகாரப்பூர்வமாக கோவை-குவைத் இடையே விமான சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த விமான சேவை நிரந்தரமானது அல்ல. 15 நாட்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...