ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்கு கோரினார். ஒப்புட்டு சாப்பிட்டு சாமானிய மக்களுடன் கலந்துரையாடினார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் AIADMK வேட்பாளராக K.R. Jayaram போட்டியிடுகிறார். தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவருக்கு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.




AIADMK பொதுச்செயலாளர் Edappadi Palaniswami மற்றும் BJP மாநிலத் தலைவர் Annamalai ஆகியோர் K.R. Jayaramஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நேற்று வேட்பாளர் ஆவாரம்பாளையம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.




ஆவாரம்பாளையம் காய்கறி சந்தைக்கு சென்ற K.R. Jayaram, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தான் இந்த தொகுதிக்கு வைத்துள்ள 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், ஒரு தேங்காய் கடையில் அமர்ந்து கடைக்காரருடன் இணைந்து தேங்காய் விற்பனையில் ஈடுபட்டார். அங்கு வந்த மக்களிடம் நேரடியாக பேசி ஆதரவு திரட்டினார்.




பின்னர் சந்தையில் உள்ள ஒரு கடையில் ஒப்புட்டு வாங்கி சாப்பிட்டு, காய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் ஆதரவு திரட்டினார். சிங்காநல்லூர் MLA K.R. Jayaramஇன் இந்த செயல் சந்தையில் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.




சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட K.R. Jayaram பேசும்போது, "சிங்காநல்லூர் தொகுதியில் நான் MLAஆக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். தற்போது மீண்டும் வெற்றி பெற்று MLAஆனதும், இந்த தொகுதிக்கு நிறைவேற்றுவதற்கு என்று 24 திட்டங்களை வைத்துள்ளேன்" என்றார்.




"MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நான் வைத்துள்ள அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றி, சிங்காநல்லூரை சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்" என்று வாக்குறுதி அளித்தார். வேட்பாளரின் இந்த எளிமையான அணுகுமுறை வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...