கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வகையில், கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், கலைஞர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதற்கு முன்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் கட்சியினர் இணைந்து இருசக்கர வாகன பேரணியும் நடத்தினர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “கழக ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதை உங்கள் வரவேற்பின் மூலம் உணர முடிகிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.



உங்கள் ஆதரவுடன் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அங்கே உங்கள் குரலாக ஒலிப்பேன். தொகுதியின் தேவைகளை வலியுறுத்தி நிறைவேற்றப் பாடுபடுவேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுவேன்.

இல்லத்தரசி திட்டம், மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சொன்னதைச் செய்வது திமுக அரசின் பண்பாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொடர உறுதிசெய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், செட்டிபாளையம் பகுதிகளில் பிரச்சார ஏற்பாடுகளை செய்த கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், உடன்பிறப்புகள் மற்றும் வாகன பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...