திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் கம்மல் தொலைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர்: நாடு முழுவதும் இன்று நீட் (NEET) தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.



கடந்த 26ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3,608 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு, இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மட்டும் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நாளான இன்று காலை 10 மணி முதலே மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மையங்களுக்கு வரத் தொடங்கினர். வழக்கம்போல் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தேர்வு மையத்திற்குள் சென்ற பிறகு, பெற்றோர்கள் வெளியே செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும், மாலை 5:30 மணிக்கு தேர்வு முடிந்த பின் வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் தேர்வு மையத்திற்கு வந்த திருப்புரை சேர்ந்த தன்ஷிகா என்ற மாணவி, சோதனையின் போது கம்மல் அணிந்து செல்லக்கூடாது என்று கூறப்பட்டதால் அவசரமாக அதை கழற்ற முயன்றார். அப்போது ஒரு பவுன் கம்மல் கீழே விழுந்து தொலைந்தது.

இதனால் மாணவியும் அவரது குடும்பத்தினரும் பதற்றமடைந்து தேடத் தொடங்கினர். அங்கு இருந்த பொதுமக்களும் உதவியுடன் தேடிய நிலையில், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கம்மல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...