உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள முரீது பாபா தர்காவில் 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.



உரூஸ் கந்தூரி விழா என்பது இஸ்லாமிய சூபி ஞானிகளின் நினைவு நாளில் தர்காக்களில் கொண்டாடப்படும் புனித விழா ஆகும்



இந்த விழா கடந்த மாதம் 19ஆம் தேதி தாஹிர் ஷா வலியல்லாஹ் தர்கா வளாகத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக மவ்லீது ஒதப்பட்டு, இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆன்மீக உரைகள் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து கந்தூரி எனப்படும் அன்னதானம் நடைபெற்றது. மேலும் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ‘சந்தன உருஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக சந்தனக்குடம் முரீது பாபா தர்காவிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு சந்தனம் மற்றும் தப்ரூத் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சைய்யத் சுல்தான் ஷா காதிரி (சஜ்ஜாதா நஷீன்), எம். மூசா, காதிரி, கா. அப்பாஸ், அசன் பாஷா, அபூபக்கர் உள்ளிட்ட உலமாக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...