கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran IAS நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran IAS இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கைப்பந்து, இறகுபந்து, கபடி மற்றும் Wushu உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்விளையாட்டு அரங்கங்கள் இங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை நேரில் பார்வையிட்ட ஆணையர், பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வில் மத்திய மண்டல உதவி ஆணையர் ச.நா.சண்முகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை நகரின் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகளை வழங்கும்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...