கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்கு பிறகு தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Coimbatore: தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 466 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவர், தவெக-வின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார். தற்போது, சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையத்தில் தொடங்கி சித்ரா, காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, துடியலூர், ஜி.என்.மில்ஸ், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், கணுவாய், தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் வரை பொதுமக்களை சந்தித்து வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தனது வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் தேவைகளுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என உறுதியளித்தார்.


Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...