ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 93 நாடுகளுக்கு பயண அனுமதி பெற்ற பயணி இவர்.


Coimbatore: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை விரட்டியதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எடிஸ்லாவ் லியன் (38) என்பவர் நேற்று காலை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் மாங்கரை சலங்கை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை அங்கு வந்துள்ளது. யானையைப் பார்த்ததும் சுற்றுலா பயணி உயிர் பயத்தில் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார். சிறிது தூரம் அவரைத் துரத்திய யானை பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.



இதற்கிடையில், வேகமாக ஓடிய சுற்றுலா பயணி கால் தவறி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்ததில் சிறு காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த எடிஸ்லாவ் லியன், 93 நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதி பெற்ற பயணி எனவும், கேரளாவில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாடகை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி – மாங்கரை வழியாக ஊட்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் வெளியே வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோவை அங்கிருந்த சிலர் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கோவை வனத்துறை அதிகாரிகள், ஆனைகட்டி – மாங்கரை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளில் வெளியே வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். காட்டுப்பகுதிகளுக்குள் அனுமதியின்றி செல்வது ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...