சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டதால் POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் மீது POCSO சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி இரவு சூலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.




மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கண்ணம்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது தப்பிக்க முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை குற்றவாளி கார்த்தி ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கில் POCSO சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி ரம்யா பாரதி உறுதிப்படுத்தினார்.




குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவளை அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதாகவும் ஐஜி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...