சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டதால் POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் மீது POCSO சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி இரவு சூலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.




மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கண்ணம்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது தப்பிக்க முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை குற்றவாளி கார்த்தி ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கில் POCSO சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி ரம்யா பாரதி உறுதிப்படுத்தினார்.




குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவளை அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதாகவும் ஐஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...