வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இறந்தவரின் விவரங்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது,


கோவை:

நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் வடகோவை ரயில் நிலையம் அருகே அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், தண்டவாளத்தில் கடுமையாக காயமடைந்து கிடந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர், முழு முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் ஆகியவை இதுவரை தெரியவில்லை. அவர் கையில் பச்சைக் குத்து இருந்ததுடன், உடலில் ஊதா நிற டவுசர் மட்டும் அணிந்திருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் எந்தவித அடையாள ஆவணங்களும் இல்லை என்பதால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் எவ்வாறு ரயிலில் இருந்து தவறி விழுந்தார், தற்செயல் விபத்தா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளிடமும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...