தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை அறிக்கை தயாரித்துள்ளது.

Coimbatore:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நகை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான மூலதன நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தங்க விலை உயர்வால் நகை உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

நிர்வாகிகள் கூறுகையில், எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை உற்பத்தியாளர்கள் மூலதன பற்றாக்குறை மற்றும் நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கும் வரி விதிக்கப்படுவது தொழில்துறைக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, மாற்றீடு முறையை அறிமுகப்படுத்துதல், உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையை அமல்படுத்துதல், கையிருப்பு மதிப்பு உயர்வை தனி கையிருப்பு கணக்கில் வரவு வைக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ICDS விதிகளில் சிறப்பு சலுகைகள் வழங்குதல், குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளர்களுக்கு ஊக அடிப்படையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் சரக்கு மதிப்பீட்டிற்கு LIFO முறையை அனுமதித்தல் போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 140 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது FIFO மற்றும் Weighted Average Method முறைகளின் அடிப்படையில்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடிவதாகவும், இதனால் பல தொழில்முனைவோர் தங்களது மூலதனத்தையே பயன்படுத்தி வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, நகை உற்பத்தித் துறையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரிச்சட்டங்களில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், சங்கம் தயாரித்துள்ள கோரிக்கை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...