தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், அவசரக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Coimbatore:

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.



கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தாழ்வான பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையம் மற்றும் லங்கா கார்னர் பகுதிகளில் 21 ஹெச்பி மற்றும் 20 ஹெச்பி திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவிநாசி மேம்பாலம் அருகே 28 ஹெச்பி, 30 ஹெச்பி, 12.5 ஹெச்பி, 25 ஹெச்பி மற்றும் 25 ஹெச்பி திறன் கொண்ட ஐந்து மின் மோட்டார்களும், 184 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் தயார் நிலையில் உள்ளன.

கிக்கானி பள்ளி அருகே 28 ஹெச்பி, 20 ஹெச்பி மற்றும் 7.5 ஹெச்பி திறன் கொண்ட மூன்று மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் காளீஸ்வரா மில் அருகே 36 ஹெச்பி, 21 ஹெச்பி மற்றும் 21 ஹெச்பி திறன் கொண்ட மூன்று மின் மோட்டார்களும், 125 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் பலத்த காற்றின் போது சாலைகளில் மரங்கள் அல்லது மரக்கிளைகள் விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் கூடுதல் மரம் அறுக்கும் இயந்திரங்களும், மாநகராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...