மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த சாலையின் ஓரத்தில் விசப்பட்ட 300 மதுபான பாட்டில்கள் மற்றும் பல நூறு கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றினர்.



மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையானது நீலகிரிக்கு இடையூறின்றி செல்லும் சாலை ஆகும். மேலும், போக்குவரத்து நெரிசல் குறைந்த இந்தச் சாலையினை ஒருசில பயணிகளே பயன்படுத்தி வரும் நிலையில், ஒருசிலர் அந்த சாலையில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை சாலையின் ஓரத்தில் வீசிச்செல்கின்றனர். மேலும், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றையும் சாலையில் வீசிச் செல்கின்றனர். 



இந்தச் சாலை வனப்பகுதிக்கு உட்பட்ட சாலை மற்றும் யானைகள் வழித்தடப் பாதையாகும். இதனால் சாலையில் வீசப்படும் மதுபாட்டில்கள் உடைந்து யானைகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் வைல்டு லைஃப் நேட்சர் கன்சர்வேசன் டிரஸ்ட், ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள், ஷெட்எஃப் வின்டு பவர் தனியார் நிறுவன ஊழியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வனத்துறையுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



இந்த தூய்மைப் பணியின் போது மேட்டுப்பாளையம்- கோத்தகிரிக்கு உட்பட்ட சாலையில் 300 மதுபான பாட்டில்களும், 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும் சேகரிக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வனப்பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும். அப்போதே வளமான பசுமையும், வன விலங்குகளும் காக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...