உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உண்டியல் காணிக்கை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில்,விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்.

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயிலில் 9 நிரந்தர உண்டியல்களும், 6 தற்காலிக உண்டியல்களும் உள்ளன. கடந்த ஜூலை 15-ஆம் தேதி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், தற்காலிக உண்டியல்களில் ஒன்றில் இருந்த காணிக்கைத் தொகை கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதுதொடர்பாக சென்னை இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகார் மற்றும் ஆய்வு குறித்து துறை ரீதியாக அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...