தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு, ஜூலை 31 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலவரையற்ற கறிக்கோழி விற்பனை நிறுத்தம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.


Coimbatore: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை காலவரையற்ற முறையில் நிறுத்துவதாக தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் தீவனக் கட்டுப்பாடு தொடர்பான நடைமுறைகளை முறையாக பின்பற்றாததால், சில்லரை விற்பனையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விற்பனையாளர்கள் கூறுகையில், கறிக்கோழிகளை விற்பனை செய்வதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாக தீவனக் கட்டுப்பாடு நடைமுறையை கடைபிடிக்க வேண்டிய நிலையில், அது முறையாக அமல்படுத்தப்படாததால் கோழிகளின் எடையில் மோசடி ஏற்பட்டு, விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இந்த எடை மோசடியைத் தடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் கூறினர்.

மேலும், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கறிக்கோழி விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...