தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பள்ளிக் கட்டணங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக கோவை செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.

கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர்கள் அதிக நம்பிக்கையுடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாக கூறினார்.

“அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்தக் கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதால்தான் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வலுப்படுத்தும் நோக்கில், ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கேற்ப கணினி அறிவியல் பயிற்றுநர்கள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார். அந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து, தேவையான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.

பள்ளி வளாகங்கள், குறிப்பாக கழிப்பறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதற்கு தற்போது வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லாததால் சில இடங்களில் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனை கருத்தில் கொண்டு, பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு நிதியை உயர்த்த முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், தற்போது இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது,” என்றார்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்தத் திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...