கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் தொடங்கி வைத்தார். மாணவர்களின் 65 மாதிரிகள், பழங்கால அரிய பொருள்கள், நாணயங்கள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தன.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் இந்திய அறிவுசார் மையத்தின் சார்பில், இந்திய அறிவு மரபின் அருமை மற்றும் ஆழத்தை விளக்கும் வகையில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மாணவர்களின் 65 மாதிரிகள், பழங்கால அரிய பொருள்கள், நாணயங்கள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.






கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் கண்காட்சியைத் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். இந்திய அறிவு மரபானது உடல், உள்ளம், உயிர் ஆகிய மூன்றையும் மேம்படுத்தும் தனித்தன்மை கொண்டது என்று அவர் விளக்கினார். இளைஞர்கள் இந்திய அறிவு மரபின் சிறப்பை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய கடமை உள்ளவர்கள் என்றும், அதை தங்கள் வாழ்வியலாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.




துணைவேந்தர் முனைவர் சு.இரவி தமது வாழ்த்துரையில், யோகம் முதலான இந்தியக் கலைகள் உடலையும் உள்ளத்தையும் பண்படுத்தும் உயர்வு கொண்டவை என்று சுட்டிக்காட்டினார். கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் வீ.ராகவி வரவேற்புரை வழங்கினார். நிகழ்த்துக் கலைப்புலத்தின் முதன்மையர் முனைவர் வெ.ஜனகமாயாதேவி நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.




கண்காட்சியில் ஆசிரியர் திருச்சி இளம்வழுதி மாவட்ட ஆணையாளர் (கப் பிரிவு) தலைமையிலான குழுவினர் பழங்கால அரிய பொருள்கள், நாணயங்கள் மற்றும் அகழாய்வுக் குறிப்புகளை காட்சிப்படுத்தியது நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தது. இந்திய அறிவு மரபை விளக்கும் வகையில் மாணவர்களின் 65 மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றன.




நிகழ்விற்கு பாரம்பரிய ஒயிலாட்டம், தேவராட்டம், வள்ளிக் கும்மி முதலான நடனங்கள் பொலிவு சேர்த்தன. கணிதத்துறைத் தலைவர் முனைவர் ம.மா.சண்முகப்பிரியா நன்றியுரை வழங்கினார். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் ச.செல்வலட்சுமி இந்திய அறிவுசார் மையத்துடன் இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.


Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...