மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை காணிக்கையாக கிடைத்தது. கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.


Coimbatore: முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக மொத்தம் ரூ.76.25 லட்சம் வசூலானது.

கோயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, நிரந்தர உண்டியலில் ரூ.72.37 லட்சம், காசோலை உண்டியலில் ரூ.2.32 லட்சம், திருப்பணி உண்டியலில் ரூ.1.55 லட்சம் என மொத்தம் ரூ.76.25 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

இதனுடன், 50.500 கிராம் தங்கம், 2.40 கிலோ வெள்ளி மற்றும் 35.600 கிலோ பித்தளை ஆகியவையும் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டன.

உண்டியல் எண்ணும் பணியை கோயில் தக்கார் ஜெயக்குமார், இணை ஆணையர்கள் விமலா மற்றும் சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர்.

சமீபத்தில் கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கையின்போது நடைபெற்ற திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, மருதமலை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தனி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. மேலும், பணியின்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...