தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: கோவை மாநகர B3 வி.எச். ரோடு புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டு பதிவான 100 கிராம் தங்க நகை வழிப்பறி வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அசோக் நகரைச் சேர்ந்த செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், அவரது ஊழியரிடம் 100 கிராம் தங்க நகையை கொடுத்து பொன்னையராஜபுரத்தில் உள்ள குளோபல் நக்ஷத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரிடம் ஒப்படைக்க அனுப்பியிருந்தார். அப்போது, குடியிருப்பு அருகே வந்தபோது இருவர் கத்தியை காட்டி 100 கிராம் தங்க நகையை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் B3 வி.எச். ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வலையபன் மற்றும் தெளபீக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, வழக்குப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதல் குற்றவாளியான வலையபன் 2023-ஆம் ஆண்டு உயிரிழந்ததால், இரண்டாவது குற்றவாளியான தெளபீக் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம், தெளபீக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...