கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர். பிஸ்டல் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.


Coimbatore: சென்னை குருநானக் கல்லூரி பயிற்சி மையத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் சிறப்பான வெற்றி பெற்று மொத்தம் 168 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.



10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ரைபிள் கிளப்புகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் ரைபிள் அசோசியேஷன் சார்பில் அசோசியேஷன் செயலாளரும் சீனியர் ஷூட்டருமான Venkatasalam தலைமையில் ரைபிள் பயிற்சியாளர் வழிகாட்டுதலின்படி சுமார் 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் 40 தங்கம், 18 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களை வென்றனர்.



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிஸ்டல் பிரிவிற்கான போட்டியில் பயிற்சியாளர் Arun தலைமையில் 23 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 41 தங்கம், 28 வெள்ளி, 16 வெண்கலம் என 85 பதக்கங்களை வென்றனர்.



மேலும் பிஸ்டல் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கோவை பிஸ்டல் வீரர்கள் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இருந்து 60 வீரர்கள் தென் மாநில அளவிற்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா கோவை ரைபில் கிளப் மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை ரைபில் கிளப் அசோசியேஷன் செயலாளரும், சர்வதேச ரைபில் பயிற்சியாளருமான Venkatasalam, அசோசியேஷன் துணை செயலாளர் Aparna Vasanth Kumar, அசோசியேஷன் பொருளாளர் Manivanan உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற வீரர்களையும் பயிற்சியாளர்கள் Arun மற்றும் Prem Sai ஆகியோரை பாராட்டினர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...