பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு பணிகளை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆய்வு செய்தனர். வெள்ளலூர் உரக்கிடங்கிலும் வடக்கு மண்டல குடிநீர் பகுதிகளிலும் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய்கள் இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்யும் வகையில் மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி சந்திப்பு பகுதியில் இன்று (12.08.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கிழக்கு மண்டலம் வார்டு எண் 9-க்குட்பட்ட விளாங்குறிச்சி சந்திப்பு பகுதியில், பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய்கள் இணைப்பு பணிகளை மேயர் மற்றும் ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டலம் வார்டு எண் 99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாகனத் தடுப்பு பகுதியில், அனுமதிக்கப்படும் வாகனங்களுக்கு QR SCANNER மூலம் அனுமதி வழங்கப்படுகிறதா என்பதை குறித்து நேரில் பரிசோதித்தார். மேலும் வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நர்சரிக்கான பணிகளையும் ஆய்வு செய்து, விரைவாக பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



பின்னர் மாநகராட்சி ஆணையாளர், வடக்கு மண்டலம் வார்டு எண் 14-க்குட்பட்ட ஸ்ரீராம் நகர், சாய் நகர் மற்றும் விக்னேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் பில்லூர் குடிநீர் திட்டம் III-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழாய் பகுதியில் குடிநீர் விநியோக அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் BOOSTER PUMP அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுகளின் போது, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், துணை தலைமைப் பொறியாளர் எழில்(பொ), உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி, மகேஷ்கனகராஜ்(பொ), உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன்(பொ), கனகராஜ்(பொ), சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், சித்ரா, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் ஃபர்மான் அலி, சந்தீப்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜெரால்டு சத்யபுனிதன், பாலகுமார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பட்டன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...