கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், உரிய விசாரணை நடத்த கோரியும் ABVP சார்பில் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போலீசார் விதித்திருந்த தடையை மீறி தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் அமுதன் (19), சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சிலரைப் பற்றி தகவல் அளித்ததால், அதில் தொடர்புடைய நபர்களால் அமுதன் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், அமுதன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்லூரியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அமுதன் தகவல் அளித்ததாகவும், அதன் காரணமாக அவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் ABVP நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும், கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மற்றும் டீன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், கல்லூரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் ABVP நிர்வாகிகள் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, போலீசார் விதித்திருந்த தடையை மீறி ABVP மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.



இதனால் கல்லூரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...