இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர் போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் பலத்த ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட நபர், தன்னை சிலர் தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய நபர், அவர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்றும் கே.ஜி. மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தெருப்பகுதியில் தங்கி கூலி மற்றும் சமையல் வேலை செய்து வந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து கோவை கே.ஜி. திரையரங்கம் முன்பு சாலையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை ரயில்வே தண்டவாளம் பகுதி வரை துரத்திச் சென்று அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் அவரை சமாதானப்படுத்தி அமர வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலையிலும் சிலர் தன்னைத் தாக்க வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தாக்குதலில் தனது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாகவும் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரியிடம் தனது கையில் ஏற்பட்ட காயங்களை காண்பித்த அருண்குமார், நடந்த சம்பவம் குறித்து கண்ணீருடன் முறையிட்டார்.

இதனிடையே, காயமடைந்த அருண்குமார் போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அருண்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர்கள் யார், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...