ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி வளாகத்திற்குத் திரும்பிய முன்னாள் மாணவிகள் பழைய நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ச்சியடைந்தனர். முன்னாள் மாணவிகள் சங்கம் தற்போது படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது.


Coimbatore: கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் கல்வி பயின்ற கல்லூரி வளாகத்திற்குத் திரும்பிய முன்னாள் மாணவிகள் தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.




தங்களது கல்லூரிக் கால அனுபவங்கள், நண்பர்களுடனான இனிய நினைவுகள் மற்றும் ஆசிரியர்களுடனான பாசமிகு தருணங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்குக் கல்வியையும், வாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் வழங்கிய கல்லூரி நாட்களைப் பூரிப்புடன் நினைவுபடுத்தி மகிழ்ந்தனர்.




முன்னாள் மாணவிகள் சங்கத்தின் சார்பில் தற்போது படிக்கும் மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கினர். முன்னாள் மாணவியர் அமைப்பின் செய்திமடல் வெளியிடப்பட்டது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. சுந்தர் ராமகிருஷ்ணன் முன்னாள் மாணவிகளின் சாதனைகளே கல்லூரியின் பெருமை எனக் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு தலைசிறந்த முன்னாள் மாணவிக்கான விருதையும் வழங்கினார்.




கல்லூரி முதல்வர் Dr. கி.சித்ரா மாணவிகளைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கல்லூரி வாழ்வை நிறைவு செய்தாலும், கல்லூரியுடனான மாணவிகளின் உறவு என்றும் தொடரும் என்றும், தொடர்ந்து முன்னாள் மாணவிகள் கல்லூரியோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.




நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் மாணவிகள் மீண்டும் ஒருமுறை பிரியாவிடை பெற்றனர். பல ஆண்டுகளைக் கடந்தும் மாறாத நட்பையும், உணர்வுப்பூர்வமான ஆசிரியர்கள்-மாணவிகளுக்கிடையிலான பிணைப்பையும் மீண்டும் உணரச் செய்த இந்தச் சந்திப்பு, அனைவரின் மனதிலும் நீங்காத நினைவாக அமைந்தது.


Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...