கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப்பை அகற்றல் ஆகியவற்றை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வரும் கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் மாமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் செலவில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.






இந்நிலையில், இன்று (26.08.2019) காலை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, குடிநீர் மற்றும் கடல்நீர் குழாய் உடைப்புகள் ஏற்படாமல் பணியை மேற்கொள்ளுமாறும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.






தொடர்ந்து அதே நாள் காலை, பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதி பகுதியில் சாக்கடை அடைப்பு சரிசெய்யும் பணியை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால், சாக்கடை அடைப்பை முழுமையாக சரிசெய்யுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.






மேலும், பீளமேடு ஷிமோகா கார்டன் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்போது பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.




அதேபோல், பீளமேடு பி ஆர் பி கார்டன் பகுதியில் சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் மரக்கிளைகள் மற்றும் மரக்குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியையும் ஆய்வு செய்தார். பிஆர்பி கார்டன் முழுவதும் மரக்குப்பைகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு ஜேசிபி இயந்திர ஓட்டுநரிடம் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...