கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மரபு அடிப்படையில் நடைபெற்றது. இசை அர்ப்பணம் மற்றும் நாட்டிய அர்ப்பணத்துடன் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்திய பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டது.


Coimbatore: கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் கலை நிகழ்த்துத் துறையின் கீழ் இயங்கி வரும் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில், இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்திய அறிவு மரபின் சிறப்பையும், கலை, ஆன்மிகம் மற்றும் பண்பாட்டின் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.



இந்நிகழ்வில் கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் நிறுவனத்தின் தலைவர் Dr. R. வசந்தகுமார் தலைமை வகித்தார். கலை நிகழ்த்துத் துறையின் புல முதல்வர் Dr. ஜனக மாயாதேவி வரவேற்புரையாற்றினார். இசைத்துறை மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இசைத்துறையின் சார்பில் இசை அர்ப்பணம் மற்றும் நடனத்துறையின் சார்பில் நாட்டிய அர்ப்பணம் சிறப்பாக நடைபெற்றன. மாணவர்களுக்கு Dr. ஜனக மாயாதேவி மற்றும் நடனத்துறை உதவிப்பேராசிரியர் Dr. J. இந்துமதி ஆகியோர் பயிற்சி அளித்து, நிகழ்ச்சிக்காக அவர்களை சிறப்பாக வழிநடத்தினர்.

மேலும், இசைத்துறைப் பேராசிரியர்களான Dr. பிரசீதா பால், C. மீரா பிரியதர்ஷினி, R. ஸ்ருதிலயா மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் T. துர்க்கா ஆகியோரின் வழிகாட்டுதலுடன், இசைத்துறை மாணவர்களால் வரலட்சுமி பூஜைக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைவர் Dr. R. வசந்தகுமார் சிறப்புரையாற்றினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி K. முருகையா, கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் துணைவேந்தர் Dr. S. ரவி, பதிவாளர் Dr. P.V. பிரதீப் ஆகியோர் சிறப்புரையாற்றி நிகழ்வைச் சிறப்பித்தனர்.

வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவம், இந்தியப் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் அதன் சிறப்பு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவாக, இசைத்துறைத் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் Dr. சஜிதா சுகு P. நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வு Indian Knowledge System-ன் சிறப்பையும், கலை, ஆன்மிகம் மற்றும் பண்பாட்டின் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...