அதிமுக இரு அணிகளுக்கு இடையே கட்சி சண்டை இல்லை எனவும், நடப்பது பதவி சண்டை தான் எனவும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்

சூலூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியை சேர்ந்தவருமான கனகராஜ் கோவை மாவட்டம் சூலுரை அடுத்த காமநாய்க்கன்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தனியார் தொலைக்காட்சியில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டதாக ஒளிபரப்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லததால் தனது எதிரிகள் பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், பெரும்பான்மையை நிருபிக்கவே கூவத்தூரில் தங்கி இருந்ததாகவும் விளக்கம் அளித்தார். 

கூவத்தூரில் பணப்புழக்கம் எதுவும் நடக்கவில்லை எனவும், சில அதிமுக உறுப்பினர்கள் ஒ.பன்னீர்செல்வம் பக்கம் செல்வதற்கு திமுகவினர் தான் காரணமெனவும் அவர் தெரிவித்தார். எம்.எல்.ஏ சரவணன் யார் என்றே தெரியாது எனவும், அவர் கூறிய புகார் குறித்து முழுமையாக அறிந்து வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் தனது அணிக்கு வருமாறு நேரடியாக அழைப்பு விடுத்தாகவும், அவரை விட எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுவார் என்பதால் ஒபிஎஸ் அணிக்கு செல்லவிலை எனவும் கனகராஜ் தெரிவித்தார். இரு அணிகள் இணைவதை மக்கள் ஏற்க தயாராக இருப்பதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை மக்கள் வெறுக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை 70 நாட்கள் காட்டாமல் வைத்திருந்ததே காரணமென அவர் தெரிவித்தார். 

மேலும் ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்ததாக புரளி பரவியதாகவும், அவர் கொலை செய்தாரா, இல்லையா என்பது ஆண்டவனுக்கே தெரியும், எங்களுக்கு தெரியாது எனவும் கனகராஜ் தெரிவித்தார். அதிமுக இரு அணிகளும் இணைய தயாராக இருப்பதாகவும், இரு அணிகளுக்கு இடையே கட்சி சண்டை நடக்கவில்லை எனவும், நடப்பது பதவி சண்டை தான் எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை அளிக்க வேண்டுமென அவரது தரப்பினர் சொல்வதே இணைப்பிற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...