பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட்டுகள் உண்ணாவிரதம்


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரை தமிழக கேரள கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது போலி சிம் கார்டு, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கேரள மற்றும் ஆந்திராவிலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதல் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ள மாவோயிஸ்ட்டு இயக்கத்தினை சேர்ந்த அனூப்பை சந்திக்க கடந்த வாரம் சிறைச்சாலைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மற்றும் சர்மா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் சிறை விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதனைக்கண்டித்து மத்திய சிறையில் உள்ள அனூப் மற்றும் வீரமணி ஆகியோர் மத்திய சிறைசாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...