அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காது மாநகராட்சியை கண்டித்து பொது மக்கள் காத்திருப்பு போராட்டம்.

கோவை, ஒண்டிப்புதூரை அடுத்த சிவலிங்கபுரம் 59வது வட்டம் சக்தி நகரில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 



இந்த பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் அடிப்படை வசதிகளை கூட செய்யாமல் இருக்கும் மாநகராட்சியை கண்டித்து சிவலிங்கபுரம் பகுதி மக்கள் இன்று காலை முதல் சக்தி நகரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.



தெருக்களில் கருப்பு கொடியோடு நடைபெறும் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் வந்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாய் உத்திரவாதம் அளிக்கும் வரையில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...