நீலகிரியில் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்க கருத்தரங்கம்

நீலகிரி மாவட்டம், உதகை கலாச்சார பண்பாட்டு மையத்தில் வணிகவரித்துறை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விழிப்புணர்வு மற்றும் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்டு, வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-

"ஜிஎஸ்டி குறித்த பொதுமக்களின் சந்தேகங்களையும், வணிக பெருமக்களின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் விதமாக இக்கருத்தரங்கம் துவங்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கினை பயன்படுத்தி பொதுமக்களும், வணிக பெருமக்களும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி ஜிஎஸ்டி குறித்து வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அச்சமடையவும் தேவையில்லை.

ஜிஎஸ்டி என்பது இதுவரை நாம் நேரடியாக வரியும், மறைமுகமாக பல வரியும் செலுத்தி வருகிறோம். இதையெல்லாம் ஒன்றிணைத்து, எளிமையாக கொண்டு வரப்பட்டதுதான் இந்த ஜிஎஸ்டி. நாட்டின் முன்னேற்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நல்ல திட்டம்தான் இது. இதனால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

வாட் வரியிலிருந்து ஜிஎஸ்டிக்கு பதிவு மாற்றம் செய்த வணிகர்கள் தற்காலிக பதிவு எண் மூலம் 3 மாதம் வரை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமும் ஜிஎஸ்டி பதிவுச் சான்று வழங்கப்படும். முழுமையாக உள்ள பதிவு விண்ணப்பத்திற்கு 3 வேலை நாட்களுக்குள் பதிவுச் சான்று வழங்கப்படும். 15 இலக்கம் கொண்ட ஜிஎஸ்டி எண் வழங்கப்படும். பதிவுச் சான்று பெறுவதற்கு பான் எண் அவசியம். பதிவு கட்டணம் இல்லை. ஆண்டு விற்பனை தொகை 20 லட்சத்திற்கு கீழ் இருந்தால் அவர்கள் ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்ய அவசியமில்லை.

சரக்கு மற்றும் சேவை வழங்குபவர் மற்றும் பெறுவபவரின் பெயர், முகவரி ஜிஎஸ்டிஐஎன் எண், தொடர்ச்சியான வரிசை எண் மற்றும் தேதி, எச்எஸ்என் குறியீட்டு எண், பொருள், சேவையின் விலை மற்றும் வரி விகிதம் ஆகியவைகளை பதிவு பெற்ற வணிகர் விலைப்பட்டியல் வழங்கும் போது கடைபிடிக்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரிகளை இணையவழி மூலமும், கடன் அட்டை, பற்று அட்டை, என்இஎப்டி, ஆர்டிஜிஎனு ஆகியவைகளின் மூலம் செலுத்தலாம். செலுத்தும் வரியானது மின்னணு பண பேரேட்டில் தானாகவே வரவு வைக்கப்படும். ஆண்டு விற்பனை தொகை ரூ.75 லட்சத்திற்குகீழ் உள்ள வணிகர்கள் 0.5 சதவிகிதம் வரியும், உற்பத்தியாளர்கள் 1.0 சதவிகிதம் வரியும், உணவகங்கள் 2.5 சதவிகிதம் வரியும் செலுத்தினால் போதும். விற்பனை பட்டியல் விவரம் தாக்கல் செய்ய தேவையில்லை.

இக்கருத்தரங்கில் கோவை கோட்ட இணை ஆணையர் செயலாக்கம் எஸ்.பிஅம்ரீத், நீலகிரி வணிகவரி துணை ஆணையர் சி.மணிமோகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...