கோஷ்டி மோதலில் இந்து முன்னணியின் நிர்வாகி படுகாயம்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை ஆலந்துரையை அடுத்த பூலுவபட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலிபால் போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து நண்பர்களின் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டுள்ளது.

அப்போது சிவா (50) என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவா-வின் மகன் சுரேந்திர குமார் (25) தனது நண்பரும், இந்து முன்னணியின் மாநகர மாவட்ட செயலாளருமான ரமேஷ் குமார் (29) என்பவருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ் குமார் அப்பகுதியைச் சேர்ந்த சுமன் (34) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மரக்கட்டையால் ரமேஷ்குமார் பலமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். 

தகவலறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதில் சுமனும் படுகாயமடைந்தார். தொடர்ந்து, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...