நீலகிரியில் பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதி மொழியை ஏற்று, குடும்ப நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.



அதனைத்தொடர்ந்து, பிரசவ அறை, புற நோயாளிகள் பிரிவு, மற்றும் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.



மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அறையினையும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, டயாலிஸஸ் பிரிவினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (சுகாதாரம்) ரகுபாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் இரியன்ரவிகுமார், துணை இயக்குநர் (மருத்துவம்) நிர்மலா, பாலசுப்ரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...