மாத ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கணுவாய் அருகே உள்ள சோமையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டுகெதர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாதாமாதம் முறையாக சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மாத இறுதியில் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பணப்பலன்களை தராமல் நிர்வாகம் இழுத்தடிப்பதோடு, சங்கத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியே மாத ஊதியத்தை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உட்பட அரசு துறைகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சம்பளத்தை பெற்றுத்தரக்கோரி மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...