குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வெங்கய்யா நாயுடு

குடியரசு துணைத் தலைவர் போட்டி வரும் ஆக்ஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வரும் வெங்கய்யா நாயுடு-வை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த வெங்கய்யா நாயுடு கடந்த 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்தார். 

கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்யா நாயுடு தற்போது குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த அறிவிப்பை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை வெளியிட்டார். 

வெங்கய்யா நாயுடு குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு சரியானவர் என்றும், நாளை காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் செய்தியாளர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.

வெங்கய்யா நாயுடுவை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி சார்பில் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...