ஜிஎஸ்டி வரி உயர்வால் லட்சக் கணக்கில் தேங்கிய நீலகிரி தேயிலைகள்


மழைகளின் இளவரசியான உதகையில் அதிகப்படியான தேயிலை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேயிலைகள் இந்தியா முழுக்க மற்றுமின்றி உலகத்தின் பெரும்பகுதிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையும், குறிப்பாக உற்பத்தி நிறுவனங்களில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ தேயிலை பயனற்ற நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.



தற்போது நீலகிரியில் தேங்கிக் கிடக்கும் தேயிலைகளின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் இருக்கும் என நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் ஜூலை 1ம் தேதியன்று உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியே என இச்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேயிலை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் கூறுகையில், நீலகிரியில் குறிப்பாக குன்னூர் பகுதியிலேயே தேயிலை விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இத்தொழிலை நம்பி ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேயிலை ஏற்றுமதியின் போது குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும். ஆனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் இடைத்தரகர்களுக்கு எதன் அடிப்படையில் கமிஷன் தொகை தருவது என குழப்பம் நீடித்து வருகிறது.



இவ்வாறு உதகையில் தேயிலைத் தொழிலை நம்பியுள்ள அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜூலை 21ம் தேதி முதல் தேயிலைச் செடியில் இருந்து புதிதாக தேயிலை பறிக்கும் பணி நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இத்தொழிலை நம்பியுள்ள நீலகிரி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...