முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து மரணம் மற்றும காயம், இயற்கை மரணம், புற்றுநோய் உள்ளிட்டு பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கல்வி உதவித் தொகை பெற நடப்பு 2017-18 கல்வி ஆண்டு துவக்கத்தில் இருந்து 6 மாதத்திற்குள்ளும், திருமண உதவித் தொகை பெற திருமணத் தேதிக்கு முந்தைய 3 மாதத்திற்குள் அல்லது திருமண தேதியில் இருந்து 6 மாதத்திற்குள்ளும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு, மரணம் நிகழ்ச்த தேதியில் இருந்து 6 மாதத்திற்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதரவற்ற விவசாய தொழிலாளர்கள் முதியோர் உதவித் தொகை பெற 60 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் முதியோர் உதவித்தொகை விண்ணப்பம் காலவரம்புகள் ஏதுமில்லை. 

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மேற்கண்ட திட்டம் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட நில வருவாய் ஆய்வாளர் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்ட தனிவட்டாட்சியரிடம் தகவல் பெற்று விண்ணப்பித்து பயனடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...