முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து மரணம் மற்றும காயம், இயற்கை மரணம், புற்றுநோய் உள்ளிட்டு பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கல்வி உதவித் தொகை பெற நடப்பு 2017-18 கல்வி ஆண்டு துவக்கத்தில் இருந்து 6 மாதத்திற்குள்ளும், திருமண உதவித் தொகை பெற திருமணத் தேதிக்கு முந்தைய 3 மாதத்திற்குள் அல்லது திருமண தேதியில் இருந்து 6 மாதத்திற்குள்ளும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு, மரணம் நிகழ்ச்த தேதியில் இருந்து 6 மாதத்திற்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதரவற்ற விவசாய தொழிலாளர்கள் முதியோர் உதவித் தொகை பெற 60 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் முதியோர் உதவித்தொகை விண்ணப்பம் காலவரம்புகள் ஏதுமில்லை. 

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மேற்கண்ட திட்டம் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட நில வருவாய் ஆய்வாளர் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்ட தனிவட்டாட்சியரிடம் தகவல் பெற்று விண்ணப்பித்து பயனடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...