நீலகிரி பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துவருவதைக் கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் உலிக்கல் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட உலிக்கல், திருவள்ளுவர் நகர், உலிக்கல் ஹட்டி ஆகிய பகுதிகளுக்கு பென்காம் எஸ்டேட் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் உலிக்கல் அருகே உள்ள கழிப்பிடம் அருகே குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனை உலிக்கல் பஞ்சாயத்தில் பணிபுரியும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணியளர்கள் முறையாக பராமரிக்காததால் அந்த கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து குழாய் வழியாக வருகின்றது.

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று உலிக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...