மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

ஜிஎஸ்டி வரி உயர்வு, வளர்மதி கைது, நீட் விவகாரம் உட்பட மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 750-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை மாநகரத்திற்கு உட்பட்ட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், கோவையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 750-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...