கோவை தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஈரானிய மாணவர்கள் புகார்

கோவையில் மருத்துவ படிப்பிற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு அதனை திரும்ப தராமல் ஏமாற்றுவதாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மீது ஈரானிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை திருச்சி சாலை கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்.வி.எஸ் கல்விக் குழுமங்களுக்கு சொந்தமான பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், ஈரான் நாட்டு மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சுமார் 20 கோடி ரூபாய் வரை தங்களிடம் பல் மருத்துவ படிப்பிற்காக ஆர்விஎஸ் கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொண்டது. ஆனால் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்துள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தங்களை நீக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தங்களது பணத்தை திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், நிர்வாகம் பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்".

இவ்வாறு அந்த மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...