நீலகிரி மாவட்டதில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை ஒன்றியத்திற்குட்பட்ட கூக்கல், எப்பநாடு மற்றும் கடநாடு ஊராட்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சுமார் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.



நீலகிரி மாவட்டம், உதகை, கடநாடு ஊராட்சிக்குட்பட்ட சொக்கநல்லி பகுதியில் 2016-2017 பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.10 வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.6.30 மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும், கூக்கல் ஊராட்சிக்குட்பட்ட சிறியூர் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.10 வீதம் 7 பயனாளிகளுக்கு ரூ.14.70 மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் ஆக மொத்தம் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை பார்வையிட்டார்.



மேலும், எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினையும், உணவுப்பொருட்களின் இருப்பினையும், மாணவ, மாணவியர்கள் தங்கும் இடத்தினையும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவினையும் ஆய்வு செய்தார். 

ஆனைகட்டி பகுதியில் உள்ள பகுதி நேர நியாய விலைகடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பினையும், அதே பகுதியில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக அகழி ஆழப்படுத்துதல் பணியினையும், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துதல் பணியினையும், சிறியூர் பகுதியில் குடிநீர் ஆதாரம் மேம்படுத்துதல் பணியினையும், அகழி ஆழப்படுத்துதல் மற்றும் நடைபாதை பராமரித்தல் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து “பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு” துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, கல்லட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சையினை தரமாக வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கடனாடு சின்னகுன்னூரில் பிளாஸ்டிக் அறவை இயந்திரம் மற்றும் மக்கும், மக்காத குப்பை கிடங்கினையும், நாற்றுச் செடிகள் உற்பத்தி செய்யும் இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரமேஷ்கிருஸ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...