உக்கடம் பெரியகுளத்திற்கு வரும் தண்ணீரில் சீர்கேடு; வாய்க்காலில் நடப்பது என்ன?

கோவை, உக்கடம் பெரியகுளத்திற்கு பேரூர் அருகே உள்ள கோயமுத்தூர் தடுப்பணையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் பயணித்து நெய்யல் நீர் உக்கடம் பெரியகுளத்தை வந்து சேர வேண்டும். வாய்க்கால் கரையில் உள்ள மண் தடத்தை காரணம் காட்டி தனியார் கட்டுமான நிறுவனம் பெரிய அளவிலான கட்டுமானத்தை நடத்தி வருகிறது. இதற்கு உடந்தையாக அரசின் அனைத்து துறைகளும்செயல்பட்டு வாய்க்கால் சுருங்கவும் நீர் வரும் பாதை தடைபடவும் காரணமாக உள்ளன.



குறிப்பாக, பேரூர் அருகே உள்ள கோயமுத்தூர் தடுப்பணையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் வரையில் வாய்கால் ஓரம் நிலங்கள் ஆக்கிரமிப்பு செயல்பட்டு பொதுமக்கள் குடியேறி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவனம் பெரிய அளவிலான கட்டிடக் கழிவுகளை இங்கு கொட்டி வருகின்றன. இதனால், பிளாஸ்டிக் பொருட்களாலும், உபரி காங்ரீட்டு கலவைகளாலும் வாய்கால் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. இதனை மீறி வரும் இந்த கழிவுநீர் உக்கடம் பெரிய குளத்தில் கலக்கிறது. மேலும், சாலை விரிவாக்கத்திற்காக வாய்க்கால் துர் வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



முதலில் 2015-2016 நிதி ஆண்டில் பொதுப்பணி துறை திட்டத்தில் வாய்க்கால் மேலே 9 இலட்சம் மதிப்பில் சாலை அமைத்தது. இந்த ஆண்டு பொதுப்பணித் துறை நொய்யல் ஆறு குளங்கள் சீரமைக்க ஒதுக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையே 23 லட்சம் தான் 2016-2017 நிதி ஆண்டில் மாநகராட்சி அதே சாலையை விரிவாக்கம் செய்து வாய்க்கால் துர்வார முடியாத அளவுக்கு தடுப்பு வேலி அமைத்துள்ளது.



ஆண்டுக்கு ஒருமுறை பொதுப்பணி துறைகள் ஒரு சாலையை போட வேண்டிய தேவை ஏற்பட்ட காரணம் என்ன? வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் புதர் மூடி உள்ளது. இதனை தூர்வார முடியாத அளவுக்கு தடுப்புவேலி அமைந்துள்ளது. கட்டுமான நிறுவனத்தின் உபரி காங்ரீட்டு கலவையை வாய்க்கால் நடுவே கொட்டி உள்ளனர். கடும் வறட்சி மற்றும் நீர் தட்டுப்பாட்டால் மக்கள் தன்னார்வ அமைப்புகள் குளம் குட்டைகளை தூர் வாரி வரும் நிலையில் அரசு துறையே இது போன்ற அநியாயத்துக்கு துணை போவது மிகவும் கண்டனத்துக்குறியது.உடனடியாக வாய்க்கால் கரையில் உள்ள தடுப்புகளை அகற்றி உடனடியாக வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...