தொழிலாளர் ஊதிய பிரச்சனையில் அரசு தலையிடாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்- ஏஐடியுசி முடிவு

தொழிலாளர் ஊதிய உயர்வு பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் நிறுவன தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2016-ம் ஆண்டு டிசம்பருடன் ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கூடுதல் சம்பளம் தர நிர்வாகம் மறுத்து விட்டதால் இது தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை வேறு கிளைகளுக்கு மாற்ற நிர்வாகம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிவு செய்யக் கோரியும் இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட கோரியும் ஏஐடியுசி சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இல்லையேல் வருகிற 7ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த ஆர்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...