ஹீரோ மோட்டார் நிறுவனப் பெயரில் போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டோர் கைது

கோவையில் மோட்டார் வாகன பாகங்களில் போலியான பாகங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் சிபி சிஐடி, வீடியோ பைராசி செல் அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல வாகன மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ், மைசூர் ட்ரன்க் சாலையில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் காரமடை சாலையில் செயல்பட்டு வரும் ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஆகிய கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், ஹீரோ மோட்டார் நிறுவன பெயர் பதித்த போலியான வாகன உதிரி பாகங்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, போலி வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்த கோவை மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து, ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனத்தின் சத்தீஷ் குமார் ராஜ்கோபால், லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ஜோதி குமார் இராமசுவாமி, ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ராஜேந்திர குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...