ஹீரோ மோட்டார் நிறுவனப் பெயரில் போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டோர் கைது

கோவையில் மோட்டார் வாகன பாகங்களில் போலியான பாகங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் சிபி சிஐடி, வீடியோ பைராசி செல் அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல வாகன மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ், மைசூர் ட்ரன்க் சாலையில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் காரமடை சாலையில் செயல்பட்டு வரும் ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஆகிய கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், ஹீரோ மோட்டார் நிறுவன பெயர் பதித்த போலியான வாகன உதிரி பாகங்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, போலி வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்த கோவை மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து, ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனத்தின் சத்தீஷ் குமார் ராஜ்கோபால், லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ஜோதி குமார் இராமசுவாமி, ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ராஜேந்திர குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...