கோவை மாவட்டத்தில் 71-வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 71-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், காவல் துறை சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்திடவேண்டும், சுதந்திரப்போராட்ட தியாகிகளை கௌரவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான பயனாளிகளின் பட்டியலை விரைவாக தயார்செய்திட வேண்டும்.

மாநகராட்சியின் மூலம் விழா நடைபெறும் மைதானத்தை முன்னதாகவே சுத்தம் செய்திட வேண்டும். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிக கழிப்பிடங்களை வைக்க வேண்டும் மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக சுதந்திர தினவிழா நடைபெறும் வகையில் முன்னேற்பாட்டுப் பணிகளை செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, உதவி பயிற்சி ஆட்சியர் சரண்யா ஹரி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்திரைத்தாள் சிதம்பரம், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...