கோவை மாவட்டத்தில் 71-வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 71-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், காவல் துறை சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்திடவேண்டும், சுதந்திரப்போராட்ட தியாகிகளை கௌரவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான பயனாளிகளின் பட்டியலை விரைவாக தயார்செய்திட வேண்டும்.

மாநகராட்சியின் மூலம் விழா நடைபெறும் மைதானத்தை முன்னதாகவே சுத்தம் செய்திட வேண்டும். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிக கழிப்பிடங்களை வைக்க வேண்டும் மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக சுதந்திர தினவிழா நடைபெறும் வகையில் முன்னேற்பாட்டுப் பணிகளை செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, உதவி பயிற்சி ஆட்சியர் சரண்யா ஹரி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்திரைத்தாள் சிதம்பரம், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...