பொதுக் கட்டிடங்கள் உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் உரிமச் சட்ட விதிகளின் படி பொதுக்கட்டிடங்களின் உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்கள், உரிமதாரர், மேலாளர், அறங்காவலர், முதல்வர், செயலாளர் என அக்கட்டிடத்திற்குப் பொறுப்புள்ள நபர்கள், பொது கட்டிட உரிமம் வழங்கக் கோரி தொடர்புடைய வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தகைய பொதுக் கட்டிடங்களுக்கு அவற்றின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு பொதுக்கட்டிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்திற்குள் செயல்பட்டு வரும் பொதுக்கட்டிடங்களுக்கு இதுவரை உரிமம் பெறாதவர்கள் உரிமம் பெற்ற கட்டிட பொறியாளரின் சான்று, தீயனைப்புத் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் சுகாதாரச் சான்று ஆகியவற்றுடன் தொடர்புடைய வட்டாட்சியருக்கு உரிய கட்டணத்தைச் சேலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், உடனடியாக உரிமம் பெற்று அதன் பின்னரே அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, பொதுக்கட்டிட உரிமம் பெற்றுள்ள நபர்கள் உரிய காலக்கெடுவிற்குள் அதனைப் புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...