கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பு செய்ய மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு


கோவை மாநகராட்சியில் பருவ மழை காலத்தினையொட்டி பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பு செய்ய மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் பருவ மழை பெய்ய உள்ள சூழ்நிலையில், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்துவதற்காக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகவளாகங்கள், தொழிற்கூடங்கள், பூங்காக்கள், ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரித்து குப்பைகளை சேராவண்ணம், அவ்வப்போது புனரமைப்பு செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்யும் போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்கள் தெரிய வரும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...