கோவையில் முக்கிய மூன்று இடங்களில் 'மல்டி லெவல் பார்க்கிங்' அமைக்க மாநகராட்சி முடிவு

கோவை நகர்ப்பகுதியில் வாகன பயன்பாடு அதிகரித்து வருவதால் நகரங்களில் முக்கிய இடங்களான வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதிக்கு வாகனங்களில் வருவோர், அதை நிறுத்த இட வசதியின்றி சாலையோரத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் முயற்சியில் கோவை மாநகராட்சி இறங்கியுள்ளது.

கோவையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன்பே கோவை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்ட இந்த 'மல்டி லெவல் பார்க்கிங்' திட்டம் தமிழக அரசு அல்லது மாநகராட்சி நிதியை எதிர்பார்த்தே இருந்தது. இதனால், கோவையில் 'மல்டி லெவல் பார்க்கிங்' திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இப்போது, தனியார் பங்களிப்புடன் இதைச் செய்வதற்கு தமிழக அரசு முன் வந்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, டவுன்ஹாலில் ரூ.23 கோடி, ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில் ரூ.70 கோடி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் ரூ.33 கோடி மதிப்பில் இந்த மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. போதிய நிதியாதாரம் இல்லாததால் திட்ட அறிக்கையை அரசு திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. 

இறுதியாக, வணிக வளாகத்துடன் மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக சொந்த செலவில் இதனை கட்டி இயக்கி திரும்ப ஒப்படைக்கும் திட்டத்தில் தனியார் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இதற்கான நிபந்தனை மற்றும் ஆவணங்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கட்டி இயக்கி ஒப்படைக்கும் (பி.ஓ.டி.,) திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் மூலமாக வணிக வளாகத்துடன் மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படும். அவர்களே வடிவமைப்பு செய்து நிதி செலவழித்து கட்ட வேண்டும். ஒப்பந்த காலம் 30 ஆண்டுகளாகும். முதல் இரண்டு ஆண்டுகள் கட்டுமான பணி நடக்கும். மீதமுள்ள 28 ஆண்டுகள் அந்நிறுவனத்தாரே கட்டணம் வசூலித்து பராமரிக்க வேண்டும். கட்டணம் எவ்வளவு என்பதை மாநகராட்சி நிர்ணயிக்கும். அத்தொகையில் ஒரு பங்கு மாநகராட்சிக்கும் கிடைக்கும். செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் டெண்டர் இறுதி செய்யப்படும். அக்டோபர் முதல் வாரத்தில் கட்டுமான பணி துவங்கும்'. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...